நான் நேசித்த அனைவரும்
என்னை நேசிக்க மறுத்த போதும்
எங்கோ ஒரு மூலையிலிருந்து நீ
என்னை நேசித்தாய்…..
என்றாவது ஒரு நாள் நீயும் என்னை
வெறுப்பதாய் இருந்தால்
அதை இன்றே கூறிவிடு
இப்போதிலிருந்தே கற்று கொடுக்கிறேன்
என் இதயத்திற்கு வலிகளை……
இதயம்
உண்மையனவர்களுக்கு தாஜ்மஹால்
துரோகிகளுக்கு வாடகை வீடு
ஏமார்ந்து போனவர்களுக்கு நரகம்
வெற்றி பெற்றவர்களுக்கு சொர்க்கம்
எனக்கு அது நினைவாலயம்.......
என் நினைவெல்லாம் நீயே.........
நினைவுகளால் என்னில் கலந்த
உன்னை பிரிக்க நினைத்தேன்,
விளைவு...,
காற்றில் கலந்த என் நினைவு..,
உன் நினைவின்றி என்
நிழல் கூட இல்லை..,
என்றும் உன் நினைவிலே நான்...,
என்றும் சிரித்துக் கொண்டே
இருக்க.....,
என் இதய பூங்காவில்
வீசுவது சில்லென்ற தென்றல்
காற்றல்ல...., சீரிய புயல் காற்று
என் கண்கள் எனும் கருமேகத்தில்
பட்டதால் எந்நேரமும் ஓயாது
கொட்டும் அடை மழையாய்
கண்ணீர்......,
ஒரு நிமிடம்!!!!!!
உயிரே எனக்காக
ஒரு நிமிடம்!!!
உன்னிடம் பேச அல்ல,
உன்னிடம் வாழ அல்ல, உன்னிடம் நினைக்க
அல்ல,
உன்னிடம் முத்தம்
மிட அல்ல,
உன்னிடம்
உயிரைவிட அல்ல,
என்
இறப்புக்கு பிறகு ஒரு
நிமிடம்"
கண்ணீர் விட!
அந்த ஒரு நிமிடம்
போதும் அன்பே!!!
நான் வாழ அல்ல,
என் உயிர்
வாழ .............
நீ விரும்பிய இதயத்தை
உன்னால் எப்பொழுதும் வெறுக்க முடியாது ,
அது போல அந்த இதயத்தை தவிர
எவராலும் உன்னை அழவைக்கவும் முடியாது ,
நீ நேசித்தது நிஜம் என்றால் ..........
எப்போதும் உன்னைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்
எப்போதும் உன்னிடம் பேசிக் கொண்டிருக்க வேண்டும்
எப்போதும் உன்னுடன் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும்
இப்போது எதுவும் முடியாத காரணத்தால் எப்போதும்
உன்னாலே செத்துக் கொண்டிருக்கிறேன்...
நீ என்னுடன் இல்லாத போதும்
நீயே நான் வாங்கும் மூச்சு
நீ என்னைக் காயப்படுத்திய போதும்
நீயே என் துன்பத்திற்கு மருந்து
நீ இங்குப் பார்க்காத போதும் நீயே நாளும் என் பார்வை
நீ என்னைத் திட்டிய போதும்
நீயே நான் நாடும் ஜீவன்
நீ என்னை மறந்த போதும்
நீயே என் நினைவு அலை...
கனவுகள் எனக்கு பிடிக்கும் ...
நீ வருவதால் ..
கண்ணீர் எனக்கு பிடிக்கும் ..
உனக்காக வருவதால்...
தனிமை எனக்கு பிடிக்கும்..
உன் நினைவுகள் என்னோடு இருப்பதால்...
உன்னை நினைத்து உறக்கம் தொலைத்தேன்
உயிரில் உறவாய் உன்னை நினைத்து கனவை வளர்த்தேன்
உன்னை பிரிந்து ஏக்கத்தில் துடித்து
உயிருடன் இன்று இறந்தே சாகிறேன்.........;
கண்களுக்கு அருகில் இமைகள் இருந்தாலும்
கண்களால் இமைகளை பார்க்க முடிவதில்லை
இருந்தும் கண்கள் இமைகளை வெறுப்பது இல்லை
என்னருகில் நீ இருந்தும்
என்னால் உன்னுடன் பேச முடியவில்லை இருந்தும்
உன்னை
என்னால் வெறுக்கவும் முடியாது மறக்கவும் முடியாது...