www.thulithuli26.blogspot.com
Thursday, October 27, 2011
கணிக்க முடியாது
ஒரு கருவில் உருவாகும்
உயிரும்,
ஒரு மனதில் உருவாகும்
காதலும் - எப்பொழுதும்
எவராலும்
கணிக்கமுடியாது!
கண்ணீராக
நீ என்னை பிரிந்தாலும் ..
.நீ என்னை மறந்தாலும் ...
என்றாவது ஒரு நாள்
நீ என்னை நினைக்கும்போது
உன் கண்களில் இருப்பேன்
கண்ணீராக.
காதல் வைரஸ்
டவுன்லோட் செய்தேன்
உன்னை!
என் இதயம் முழுக்க
காதல் வைரஸ்!
கனவு
இறைவனின் படைப்பில் எனக்கு பிடித்தது
கனவு...
ஏனென்றால் அதில் மட்டும் தான் நீ எனக்கு என்று காண்பதால்........!
வெட்கங்கெட்ட மனது
நீ என்னை
எத்தனை முறை
வெறுத்தாலும்
உன்னை மட்டுமே
தேடித் தேடி
அலைகிறது
இந்த
வெட்கங்கெட்ட மனது...!
அன்பை மட்டும்....!
எதிர்பார்ப்புகள் இல்லை என்றால்
வாழ்வில் அர்த்தமே இல்லை...
எதிர்பார்கிறேன் என்றும் உன்னிடம்
அழகான அன்பை மட்டும்....!
இருமுறை ஏனடி தேடுகிறாய்?
இதயத்தில் காதல் இருக்கின்றபோது
இதழ்களை ஏனடி மூடுகிறாய்...?
ஒருமுறை என்னைக் காணாது போனால்
இருமுறை ஏனடி தேடுகிறாய்?
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)